Tag: தந்தை பெரியார்

  • பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு…

  • பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!

    பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…! *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…! பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…! பள்ளிக்கூடம் சென்று நீ பாடம் படிக்கவில்லை, உனைப்படிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை…! எதுகை,மோனை எதுவும் உன்பேச்சில் என்றுமில்லை, பகுத்தறிவு ஒன்றே நீ பெற்றெடுத்த பிள்ளை…! கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு…

  • வெற்றிபெறும் வழி!

    ‘கொள்கையை நிறைவேற்றும் வழியை பெரியார் கற்றுத்துந்துள்ளார்’ என்று சொல்லியுள்ளீர்களே…. அது என்ன? என்று கேட்கிறார்கள் சிலர். உலகில் வெற்றியடைந்த புரட்சிகரமான போராட்ட வரலாறை படித்துப் பார்த்தால், அதை பெரியாரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எளிதாக அறிந்துகொள்ளலாம் கொள்கையை நிறைவேற்றும் வழியினை! அது என்ன வழி? மக்களை மாற்றத்திற்கு தயார்படுத்துவதே அந்த வழி! கொள்கையை தொடர்ந்து…. தொடர்ந்து என்றால் இடையறாது தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, அதை விட முக்கியமாக, அந்த கொள்கை வழி வாழ்ந்து முன்னுதாரணமாக இருப்பது ஆகிய…

  • பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? -கி.தளபதிராஜ்

    மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…

  • ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில் ஜெயலலிதா மீதான தனி நபர் வழிப்பாட்டுக்கு ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம். அவர் இயக்கத்தை சர்வாதிகாரியாக இருந்து நடத்தினாராம், பொதுக்…

  • பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

    பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

    மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…

  • டிஜிட்டல் பார்ப்பனீயம்

    டிஜிட்டல் பார்ப்பனீயம்

    ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள். 1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான். 1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக…