Category: கவிதை

  • பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!

    பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…! *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…! பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…! பள்ளிக்கூடம் சென்று நீ பாடம் படிக்கவில்லை, உனைப்படிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை…! எதுகை,மோனை எதுவும் உன்பேச்சில் என்றுமில்லை, பகுத்தறிவு ஒன்றே நீ பெற்றெடுத்த பிள்ளை…! கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு…

  • ON PERIYAR

    ON PERIYAR

    A Super nova blaz’d in the azure sky Looked down and saw a world of caste and cant Its frown made the Brahmin priest and devil fly No more could they give their shibboleth a godly slant. The poor Harijan, banned from entering Vaikkom. Curs’d his own Fate and thought it was god-made, A young…

  • எங்கள் அப்பா

    எங்கள் அப்பா

    அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது… அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது… செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது……

  • குஷ்பு புடவையும் குமுறும் கடவுளும்!

    கிருஷ்ணன்: கோபியர் கொஞ்சி நாளாச்சு! அவதாரம் தரித்தகாலம் அழிஞ்சே போச்சு! குஷ்பு புடவையில் நான் தான்! நினைக்கையிலே தேன்தான்! இராமன்: மயக்கம் தீரலையோ? மன்மதா! பக்தனெல்லாம் படைதிரட்டி நிற்கிறான்! ஏகபத்தினி விரதன் ராமன்! -குஷ்பு தேகம் சுத்தும் சேலையிலா? விலாநோக விம்முகிறான்! விவரங்கெட்ட பக்தன். தூணிலும் துரும்பிலும் இருக்குமெனக்கு குஷ்பு துணியிலிருக்க உரிமை இல்லையா? ஆதாரத்தோடு ராமன் கேட்க ஆத்திரத்தோடு நுழைந்தார் ஆஞ்சநேயர்! ஆஞ்சநேயன்: அடே ராமா! ஆண்டு அனுபவித்த அதிர்ஷ்டகட்டைகள் நீங்கள்! அடியேன் கதை அப்படியா?…

  • நவம்பர் 13

    நவம்பர் 13

    இன்று இருபதாம் நூற்றாண்டின் நரகாசுரனுக்கு தமிழ் மண்ணின் தேவிகள் பெரியார் எனப் பெயர் சூட்டிய நாள். அறியாராய் இருந்த தமிழர்களை, ஆரியம் சிறியாராய் அவமதித்த திராவிடர்களை, எதுவும் தெரியாராய் ஆக்கிட சூழ்ச்சி புரிவோரின் ஆணவத்தைச் சுட்டெரித்திடப் பகுத்தறிவுப் பாடம் சொல்லிய சூரியனுக்குப் `பெரியார்’ எனப் பட்டம் சூட்டியது சரிதானே என்று உலகம் சொல்கிறதே இன்று….!      – சம்பூகன்

  • மதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்

    தேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும். ராஜாஜியின் கவிதை “சாராய சகாப்தம்’ ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்; வீழ்ந்தவர்கள் முன்போல் வாட ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார் கள்ளும் சாரயமும் தந்தார் அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில் போற்றுக முதல்வர் பணியை!…

  • திசைகாட்டும் கருவிகள்

    திசைகாட்டும் கருவிகள்

    இந்தி எதிர்ப்பு மாநாடு! ஈரோடு எங்கும் கொடிக்காடு! அகங்காரம் அறுத்தெரிந்த அண்ணா அலங்கார வண்டியில் அமர்ந்திருக்க… தம்பிக்குப் பின்னால் தடியூன்றி தள்ளாடித் தள்ளாடி தாடிக்கிழவன் நடந்து வர… ஊர் மெச்சிய ஊர்வலம் உற்சாகமாய் அரங்கேறிற்று! வழி நெடுகிலும் குழுமியிருந்த கூட்டம்… அய்யாவின் பனித்துளி நிகர்த்த பாசம் பார்த்து கண்ணீர்த்துளிகள் உதிர்த்தன கரைபுரண்ட களிப்போடு! எனக்கு வயது எழுபதைத் தாண்டிற்று! என் முதுமை என் முதுகில் தட்டி… பெட்டிச் சாவியைப் பிள்ளையிடம் கொடு என்று வேண்டிற்று! மாநாட்டு மேடைதனில்…