கடவுள்கள் இவ்வளவு கையாலாகதவர்களாகவா இருப்பார்கள்!அண்மையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஸ்ரீகாகுளம் நரசிம்மசுவாமி கோயில் ரதம் தீவைத்து எரிக்கப்பட்டது. சுற்றுப் பிரகாரத்தில் இருந்த(சாமி)சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிகழ்வை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கவா கடவுள்?நூறாண்டு பழமைமிக்க அந்தக் கோவிலைப் பாதுகாக்க, படாரென்று கதவை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாமா கடவுள்? நம் புராண இதிகாசக் கதைகளில் செய்வதுபோல…
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் – 26)
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாணசுந்தரனார் 137 ஆம் பிறந்த நாள். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு இதே நாளில் தற்போது…
பொருளாதார அளவுகோல் என்னும் கண்ணிவெடி யால் தகர்க்கப்படும் சமூகநீதியை மீட்டெடுக்க மண்டல் பிறந்த நாளில் சூளுரைப்போம்!
உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு வெற்றி கிட்டும்வரை போராடுவோம்! இன்று (25.8.2020) இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக பொறுப்பேற்றுச் செயலாற்றிய – பீகாரின் முன்னாள் முதல்வரும், வழக்குரைஞருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களது 103 ஆவது பிறந்த நாளாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
பெரியார்
வரவு செலவுக்குத் தயாரா? வெறும் சிலையல்ல பெரியார் வீறுகொள் சித்தாந்தத்தின் சீலம்! சிதைத்து நொறுக்கப்பட்ட திராவிடச் சமுதாயத்தைச் செதுக்கவந்த யுகப்புரட்சியின் ஞானம்! சிறுநரிகள் ஊளையிட்டு சிங்கச் சேனைக்கு அழைப்பா? சிறுபிள்ளைத் தனம் செய்வதறியா மடத்தனம்! காவிச் சாயத்தை ஊற்றினாய் காலித்தனத்தின் புத்தியைக் காட்டினாய்! கட்சிகளை மறந்தனர் எம் தலைவர்கள் கர்ச்சனைத் தோள்களைத் தட்டினர் கண்டனக் கூர்வாள்…
எதிரிகளே, எதிரிகளே! என் மீது சாயம் பூசுங்கள்!
அப்போதுதான் என் பிள்ளைகளுக்கு ரோசம் வரும்! அப்போதுதான் என் பேரப்பிள்ளைகள் வெகுண்டு எழும்! அப்போதுதான் என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு என்னைப் பற்றி அறிய முடியும்! எதிரிகளே எதிரிகளே! எனக்குச் செருப்பு மாலை போடுங்கள்! அப்போதுதான் தூங்கிக் கிடக்கும் என் மக்கள் துள்ளி எழுவார்கள்! எதிரிகளே எதிரிகளே! என் சிலைகளை உடையுங்கள்! அப்போதுதான் உங்கள் முதுகுப்…
பெரியார்
எனக்குப் பெரியாரை பிடிக்கும் என்பதில் யாருக்கு என்ன பிரச்சனை? தொடர்ந்து பலர் என்னிடம் “பெரியார் ஒண்ணும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை”, என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அப்படி முயல்கிறவர்கள் கோபமாக, ஆத்திரமாக, சில சமயம் அநாகரிகமாக கூட அவர்களது வாதங்களை முன் வைக்கிறார்கள். மிகவும் கூர்ந்து கவனித்தால் இவர்கள், ஏதோ காரணத்திற்காக தனக்கோ, தன் இனத்திற்கோ…