Category: சமூகநீதி

  • பெரியார்

    ஆரியச் சாக்கடையில் அறிவு தொலைத்த எம் மக்களின் புத்தியை சுத்தம் செய்ய வந்த ஈரோட்டு சானிடைசர்! சனாதன தர்மமென்று எம்மைச் சூத்திர பஞ்சமனாக்கிய கயவர்களின் தோலுரித்த கருப்புச் சாட்டை! வேத ஆகமங்களைக் காரணம் காட்டி மூடிய கருவறைக் கதவுகளின் சூழ்ச்சியை உணர்த்திய பேரரக்கன்! தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டென ஆரியம் மூட்டிய தீண்டாமைத் தீ அணைக்கப்பொங்கி எழுந்த பகுத்தறிவுப் பேரலை! அன்றாட வாழ்வியலோடு நகமும் சதையுமாய் ஒன்றிக் கிடந்த மூடப் பழக்கங்களைக் கொத்தாய் அகற்றிய ஜேசிபி! அக்கிரஹாரத்திற்குள்…

  • ஆணவ (கவுரவ)க் கொலையும் தீர்ப்பும்

    கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற காதல் இணையர்கள் சங்கர்- கௌசல்யா மீதான கொலைவெறி தாக்குதல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில்  படுகாயமடைந்த உடுமலை சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயமடைந்த கௌசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. வழக்கு இதையடுத்து, கௌசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.…

  • ஜாதி ஒழிப்பில் பெரியார்!

    தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பை தனது சாவு வரையிலான போராட்டமாகக் கொண்டவர்! அதனால்தான், “ஜாதிப்பிணியை போக்க வந்த மாமருந்து ” என்று போற்றினார் புரட்சிக்கவிஞர். பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விடவும், தீண்டத்தகாத சமுகத்தினரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானது என்று மேடைகளில் முழங்கியவர் மட்டுமல்ல, போராடிப் போராடி அந்த உரிமைகளைப் பெற்றுத்தந்தவர் பெரியார்தான். இந்து மதத்தில் பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்த தீண்டாமையை பெரியார், தீண்டத்தகாத தீங்காகக் கருதினார். அது நான்காம், அய்ந்தாம் ஜாதியினரை விலங்கினும் கீழாக வைப்பதைக் கண்டு பொங்கினார்.   பஞ்சமர் பட்டம்  ஒழியாமல்,  சூத்திரப்பட்டம் போகாது என்று உரைத்தார்.  இந்து மதத்தையே ஒழிக்க…

  • தோல்வி அல்ல இது

    தோல்வி அல்ல இது

    தோல்வி அல்ல இது, உயிர்ப்போடும், கொண்ட கொள்கைகளோடும் பீனிக்ஸ் பறவையாகத் தான் எழுந்து வந்திருக்கிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரிதான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பல எதிரிகள். அதிகாரப் பசியும், துரோக வரலாறும் கொண்ட சகுனிகள் மறைமுகமாக பாசிச ஜெயாவுக்கு முட்டுக் கொடுத்த வாக்குச் சிதறல், மதவாத முகமான ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எல்லா இடத்திலும் ஒரு நாற்காலியைப் போட்டு வளர்க்கும் முதலாளித்துவ ஊடகங்கள், சாதிய ஆற்றல்களை ஒன்றிணைத்து சமூகத்தைப் பிளவு செய்த ஒற்றைச் சாதி ஆதிக்க ஆற்றல்கள். அடக்குமுறையை…

  • தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவ 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்கநாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேணாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம். நீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாயரும்,தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? நீதிக்கட்சியினர் திராவிடர்…

  • நாகையில் பெரியார் கொடுத்த குரல்! -கி.தளபதிராஜ்

    குழந்தைத் தொழிலாளர் சட் டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற் கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள், திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள் பட்டவர்களை ஈடுபடுத்தவும்,…

  • இட ஒதுக்கீடு குறித்து சில அரைவேக்காடுகளுக்கு…

    இட ஒதுக்கீடு குறித்து சில அரைவேக்காடுகளுக்கு…

    இட ஒதுக்கீடு. சில கேள்வி பதில்கள். 1) கேள்வி: நகர்ப்புறங்களில், ஃப்ளாட் கலாச்சாரத்தில் ஜாதிப் பாகுபாடே இல்லையாமே? பதில்: பதில்: கிராமங்களில் வீதிகளில் ஜாதி இருக்கிறதென்றால் நகர்ப்புறங்களில் ஃப்ளாட்டுகே ஜாதி இருக்கிறது. அடயார் டைம்ஸ், திருவான்மியூர் டைம்ஸ், ராயப்பேட்டா மணிக்கூண்டு டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகளில் கொட்டிக் கிடக்கும் ‘Non-Brahmins excuse’ போட்ட விளம்பரங்களைப் பார்த்ததில்லையா நீங்கள்? அல்லது மேட்ரிமோனியல் தளங்களில், ‘சாதி பிரச்சினையில்லை. SC, ST தவிர்த்து’ போன்ற விளம்பரங்களைப் பார்த்ததில்லையா? பெரிய வணிக நிறுவனங்களின் மேலாளர்கள்…