பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார்.

எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார்.

புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத் தவறியதில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, “வெள்ளைக்காரனிடமிருந்து ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடம் கை மாறியிருக்கிறது. இது நமக்கு துக்கநாள்” என அறிவித்த பெரியார் அதில் மாற்றுக்கருத்து கொண்டிருந்த அண்ணாதுரை அவர்களின் கட்டுரையையும் தனது விடுதலை நாளிதழில் வெளியிட்டதை அறிந்தவர்களுக்கு பெரியாரின் கருத்துச்சுதந்திம் பற்றி சந்தேகம் எழாது.

தான் கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற தன் இயக்கத்திற்கு கட்டுப்பாடான ஆயிரம் முட்டாள்கள் போதும் என்ற பெரியார் தான் “தன் கருத்துகளை அப்படியே ஏற்றுகொள்ளும்படி நான் கூறவில்லை. ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்துப் பார்த்து சரி எனப்பட்டதை ஏற்றுகொள்ளுங்கள்” என மேடை தோறும் மறக்காமல் சொன்னார்.

பெரியாரின் இந்த குணநலன்களில் எவற்றோடு ஒத்துப்போகிறார் ஜெயலலிதா?

தமிழகம் அறிந்த திராவிட இயக்க எழத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதே பெயரைகொண்ட வேறொரு ஆசாமியைக் கொண்டு இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறது இன்றைய தமிழ் இந்து நாளிதழ்!