Tag: திராவிடம்

  • பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு…

  • கொட்டை எடுத்த புளிகளுக்கு…

    கொட்டை எடுத்த புளிகளுக்கு…

    ஆர்.எஸ்.எஸ் – போலி தமிழ்த்தேசிய கூட்டு அம்பலம்! ———————————————————————– இந்த Krishna Tamil Tiger என்கிற தமிழ் புளி தான் ஒரு அரைகுறை என்பதை அவரே அவ்வப்போது நிருபித்துக்கொண்டே இருப்பார். காஞ்சி சங்கராச்சாரி காலடியில் இந்தியாவின் மத்திய அமைச்சராக இருக்கிற பொன்.இராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கும் படத்தையும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிய சாமி நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒப்பிட்டு தோழர்கள் சிலர் பதிவுகளை எழுதியிருந்தார்கள். அறியாமையில் இருக்கும் இந்து மத பக்தர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆதரவாளர்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத…

  • வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்

    வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்

    திராவிட முன்னேற்ற கழகம்! “முன்னேற்றம்” என்பதற்கு பொருள் என்ன? திருடர் முன்னேற்றம்! அதுதான் அதற்கு பொருள். திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே. அது என்ன? திராவிடக் கொள்கை? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்திவச்சோம்! நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்திவச்சோம்! ன்றாங்க. போங்கடா வெட்டிப்பயல்களா! எங்க ஊர்ல பார்த்தா அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு. சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம்…

  • திராவிட மாயை(!?)

    திராவிட மாயை(!?)

    ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள்…

  • பெரியாரை எதிர்ப்பது தான் தமிழ்த் தேசியமா? – தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு பதில்!

    கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே? தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்: இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் ‘தமிழன்’ என்ற ஒரு…

  • ஜெ.வின் தமிழ்நாட்டுத் துரோகம்!

    ஜெ.வின் தமிழ்நாட்டுத் துரோகம்!

    தமிழர்களின் 150 ஆண்டுக் கனவான சேது சமுத்திரத்திட்டத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என ஜெ.யின் அரசு மனு போட்டுவிட்டது. எந்த வளமும் இல்லாத வானம் பார்த்த பூமியான தென் மாவட்ட மக்களின் வாழ்வில், பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டமாகத்தான் சேதுத் திட்டத்தை அன்றைய தலைவர்கள் முன் மொழிந்தனர்.குறிப்பாக தென் மாவட்டத்தில் பிறந்த பெருந்தலைவர் காமராசர் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.பேரறிஞர் அண்ணா தி.மு.க.தொடங்கிய காலத்தில் இருந்து வலியுறுத்தியுள்ளார். தொழில் வளம் இல்லாததால் தென் மாவட்டங்களில் ஜாதிய உணர்வும் மேலோங்கும் நிலை எந்நாளும்…

  • பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித்  தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…