கொட்டை எடுத்த புளிகளுக்கு…

ஆர்.எஸ்.எஸ் – போலி தமிழ்த்தேசிய கூட்டு அம்பலம்!
———————————————————————–
இந்த Krishna Tamil Tiger என்கிற தமிழ் புளி தான் ஒரு அரைகுறை என்பதை அவரே அவ்வப்போது நிருபித்துக்கொண்டே இருப்பார்.

காஞ்சி சங்கராச்சாரி காலடியில் இந்தியாவின் மத்திய அமைச்சராக இருக்கிற பொன்.இராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கும் படத்தையும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிய சாமி நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒப்பிட்டு தோழர்கள் சிலர் பதிவுகளை எழுதியிருந்தார்கள். அறியாமையில் இருக்கும் இந்து மத பக்தர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆதரவாளர்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு, இந்து மதத்தில் அனைத்து மட்டங்களிலும் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை எளிமையாக விளக்கியது இந்த ஒப்பீடு. உண்மையிலேயே அந்த ஒப்பீடைப் பார்த்து கோபம் கொள்ளவேண்டியது ஆர்.எஸ்.எஸ் இந்து மத வெறியர்கள்தான். ஆனால் வழக்கம் போல (போலி) தமிழ்த் தேசியவாதிகளுக்குதான் கோபம் வருகிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களிடம் நாம் எதிர்பார்த்த பதிலை இந்த (போலி) தமிழ்த் தேசியவாதிகள் தருகிறார்கள்.

சங்கராச்சாரிக்குச் சரிசமமாக மாமா சு.சாமியும், தரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்

பெங்களூர் குணா என்னும் அயோக்கியரின் ரசிகரான இந்த தமிழ் புளி எழுதியிருக்கும் பதிவில், அந்த குணாவை போலவே பொய் தகவல்களையும் முட்டாள்தனமான கருத்துக்களையும் நிரப்பியிருக்கிறார்.

இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கே.ஆர்.நாராயணனின் சிறப்புகளில் ஒன்று, அவர் சங்கராச்சாரிகள் உட்பட எந்த ஒரு இந்து மத தலைமை பீடத்தையும் போய் சந்திக்காதவர். பலராலும் பல முறை இந்த சிறப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபரோ, கே.ஆர்.நாராயணன் சங்கராச்சாரி காலடி அமர்ந்தார் என்று எழுதுகிறார் , கற்பனையாக குணா பாணியில்.

திருமாவளவன் போய் சங்கராச்சாரியை பார்த்தாரே, அவர் சங்கராச்சாரி தலையிலா போய் அமர்ந்தார் என்று கேட்கிறார். இது என்ன வகையான கேள்வி என்று தெரியவில்லை. திருமாவளவன் சங்கராச்சாரியை சந்தித்துபற்றி உறுதிபடுத்தப்படாத தகவல்கள்தான் உலவுகிறது. அதனால் அதைப்பற்றி நாம் பேசமுடியாது. ஆனால் கக்கன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர் சங்கராச்சாரியை சந்திக்க சென்ற போது, நேரில் பார்த்தாலே தீட்டு என்று குறுக்கே பசுமாட்டை நிறுத்தி , அவருடன் பேசியவன் இதற்கு முன்னால் இருந்த பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரன். இந்த வர்ணாசிரம கொடுமையை ஒழிக்கவேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் பொத்துக்கொள்கிறது தமிழ்த் தேசியர்களே.

சங்கராச்சாரியை சுப்பிரமணிய சாமியையும் வைத்து வெறும் “பூச்சாண்டி” காட்டுகிறார்கள் திராவிடர் இயக்கத்தினர் என்கிறார் இந்த தமிழ்த்தேசியவாதி. சில நாட்களுக்கு முன்புதான், தலித் மக்களை கோவிலுக்கு உள்ளேயே விடக்கூடாது என்று சொல்லியிருக்கிறான் பூரி சங்கராச்சாரி. இதெல்லாம் வெறும் பூச்சாண்டிதான் இந்த தமிழ்த்தேசியவாதிகளுக்கு. வேற என்னதான்டா பிரச்சனை என்று கேட்டால், அவன் தமிழ்ஜாதி இவன் தெலுங்கஜாதி என்று மொக்கத்தனமாக எதையாவது வைத்துக்கொண்டு ஜல்லி அடித்துக்கொண்டிருப்பார்கள். இந்த விவாதத்தில் கூட, ஒரு தமிழ் பார்ப்பனர் சங்கராச்சாரி ஆக முடியாது என்று பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாமல் எதையோ உளறுகிறார் இந்த தமிழ் புளி. தமிழ் பார்ப்பனர் சங்கராச்சாரி ஆனால் பொன்.இராதாகிருஷ்ணனை மடியில் தூக்கி வைத்துக்கொள்வாரா என்று அவர் பாணியிலேயே நாமும் கேட்டு வைப்போம்.

சங்கரமட எதிர்ப்பு என்பது “பூச்சாண்டியை” காட்டி தமிழர்களை ஏமாற்றும் செயல் என்கிறார். அடுத்த வரியே பெரியார் சங்கரமடத்தை ஏற்றுக்கொண்டார் என்கிறார். என்னதான்டா உங்களுக்கு பிரச்சனை. கொஞ்சாமவது புத்தியும் நேர்மையும் உள்ளவன் எவனாவது தமிழ்த்தேசியவாதிகளில் இருந்தால் , பெரியார் எப்படா சங்கரமடத்தை ஏற்றுக்கொண்டார்னு கேட்டிருக்கனும். ஆனால் நமக்குதான் இந்த தமிழ்த்தேசியவாதிகளைப்பற்றி தெரியுமே. பெரியாரை கொச்சைப்படுத்தி எதாவது எவனாவது எழுதிவிட்டாலே போதும் குஷியாகி அதை விரும்பவும் பகிரவும் செய்வார்கள்.

சங்கரமட எதிர்ப்பு, சுப்பிரமணியசாமி எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பதெல்லாம் வெறும் திசைத்திருப்பும் செயல் என்கிறார்கள் போலி தமிழ்த்தேசியர்கள். உண்மையிலேயே , ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துதான் இங்கு பல முக்கிய பிரச்சனைகளின் மீதும் மக்களின் கவனம் செல்லாமல் திசைத்திருப்படுகிறது என்பது கொஞ்சம் சுயபுத்தி உள்ளவர்களுக்குகூட தெரியும்.

இத்துணை ஆண்டு காலம் இங்கே பார்ப்பனியத்தை எதிர்த்து கோலோச்சிய திராவிடம் சங்கர மடத்தின் ஒரு செங்கலையாவது அசைத்து இருக்குமா என்று கேட்கிறார். புத்தரை தின்று செறித்த பார்ப்பனீயம், பல தமிழ் சித்தர்களை தின்று செறித்த பார்ப்பனியம், இன்று பெரியாரை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தினறுகிறது. தங்களுக்கு துணையாக தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் சிலரை தயார் செய்து பெரியாருக்கு எதிராக அவதூறுகளை செய்ய பணித்திருக்கிறது. அவர்கள் சொல்வது என்னவென்றால், இத்தனை ஆண்டுகாலம் போராடியும் உங்களால் சங்கரமடத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை, எனவே அவர்களை எதிர்க்காதீர்கள் என்பதுதான்.

அந்த போலி தமிழ்த்தேசியவாதிகளுக்கு புரியும்படி பதில் சொல்வதென்றால், ஒரு அறுபது ஆண்டுகாலம் அறவழியிலும் ஆயுதவழியிலும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடிய பிறகு, இன்று ஈழத்தமிழர்கள் எல்லாமும் இழந்து சொந்த மண்ணிலும் புலம் பெயர்ந்தும் அகதிகளாக எதிர்காலம் குறித்த எந்த தெளிவும் இல்லாமல் நிற்கிறார்களே, இதெல்லாம் விடுதலைப் போராட்டம் என்கிற பெயரில் சிங்கள அரசுடன் சேர்ந்து புலிகள் செய்த சதித்திட்டம் என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தமோ அயோக்கியத்தனமோ, அப்படிதான் தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் இந்த போலிகள் செய்கிற அவதூறுகளும்.

பெரியார் மீது அவதூறு செய்வதே முழுநேர பணியாகக் கொண்டிருக்கும் இந்த போலி தமிழ்த்தேசியவாதிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பீர்!

– பிரபா அழகர்