வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ! (பகுதி 2)

கேள்வி 11: ஒரு பிராமணப் பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிடக் கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?
பதில் 11: பார்ப்பனப் பெண் ஆட்சி என்பதால் அதை என்றைக்குமே நாங்கள் எதிர்த்ததில்லை. தி.மு.க. தவறு செய்தபோது, ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தோம். இடஒதுக்கீடு உயர வழி செய்தமைக்கு பட்டம் கொடுத்துப் பாராட்டினோம்.
தப்பு செய்தால் யாரையும் எதிர்ப்போம். சமூகநீதி காக்கும் யாரையும் பாராட்டுவோம். எங்கள் தைரியம் அவாளுக்கு நன்றாகவே தெரியும் வோய்!
கேள்வி 12: அந்த ஒரு பிராமணப் பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?
பதில் 12: யார் காலில் விழுந்தாலும் அதைக் கண்டிப்பதில் முதலாக நிற்பது நாங்கள் என்பதை நாடே நன்கறியும். யாருக்கும் அஞ்சும் இயக்கம் இதுவல்ல.
கேள்வி 13: பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?
பதில் 13: பிச்சையெடுத்துப் பிழைக்க இந்த நாட்டுக்கு வந்து, தமிழன் கட்டிய கோயிலுக்குள் புகுந்து, ஆட்சியில் புகுந்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள் பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களில் வேலையிலிருந்து வெளியேறிவிட்டு, பார்ப்பன நிறுவனங்களில் மற்றவர்களை சேர்ப்பதில்லை என்று முடிவு செய்! அதை விட்டுவிட்டு நீ எங்கள் நிறுவனத்தில் நுழைந்து பிழைப்பாய். எங்கள் நாட்டிலிருந்து கொள்ளையடித்து நீங்கள் உருவாக்கியிருக்கும் நிறுவனத்தில் நாங்கள் வரக்கூடாது என்பது அயோக்கியத்தனம் அல்லவா?
கேள்வி 14: பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு, பார்ப்பானைக் கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?
பதில் 14: பைத்தியக்காரா! இது என்ன உளறல். இதைச் சொன்னது பெரியார் அல்ல என்ற உண்மை நொய்யரிசிகளான நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இது ஓர் வடநாட்டுப் பழமொழி என்பதை பீவர்லி நிக்கல்ஸ் என்பவர்  1944ல் எழுதிய  Verdict on India என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டி எப்போதோ விளக்கமளித்துவிட்டார் ஆசிரியர் கி.வீரமணி.
நாங்கள் எந்த தனி நபரையும் எதிர்ப்பவர்களும் அல்ல. வன்முறையில் ஈடுபடுகின்றவர்களும் அல்ல. அப்படி இற்ஙகியிருந்தால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்.
கேள்வி 15: குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப் பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?
பதில் 15: அவரே பதில் சொல்லிவிட்டாரே! எதையும் அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக நீயெல்லாம் கேள்வி கேட்டு வந்துவிட்டாய்! ஆன்மீகத் தலைவர்கள் சுயமரியாதைக்கும் சமதர்மத்திற்கும் பாடுபட்டிருப்பின் அவர்களை நாங்களே பாராட்டியிருக்கிறோம்.
தொடர் வரும்போது தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயம்வரின் தட்டிக் கேட்போம். கொள்கையில் சமரசம் என்றைக்கும் எங்களிடமில்லை! தி.மு.க.வோடு நாங்கள் கடுமையாக மோதிக்கொண்டதெல்லாம் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். உமக்கெங்கே தெரியப் போகிறது.
கேள்வி 16: ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?
பதில் 16: அடிமைச் சின்னம் எது இருந்தாலம், அறிவுக்கு ஒவ்வாதது எதுவாயினும் அதை அகற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதைச் செய்ய யார் முன்வந்தாலும் நாங்கள் வாய்ப்பளிப்போம். கிறிஸ்தவர்களின் திருமண மோதிரம் இருபாலருக்குமானது; தாலியைப் போல பெண்கள் கழுத்தில் மட்டும் திணிக்கப்படுவதல்ல.
அதே நேரத்தில் மத அடையாளங்களாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் பூணூலும் சிலுவையும் அகற்றப்பட்டதை வரவேற்றுப் பாராட்டியவர்கள் நாங்கள்.
கிறித்தவ, இஸ்லாமிய மதங்களை விமர்சித்து நாங்கள் நூல் வெளியிடுவது உம்மைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இனிமேலாவது படித்துத் தெரிந்து கொள்.
கேள்வி 17: பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன், சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?
பதில் 17: அதென்ன பிறப்புத் திறன்? அட அடிமுட்டாளே! பிறவியில் திறமை பேசியவனெல்லாம் இன்று வெட்கித் தலைகுனிய, பார்ப்பனரல்லாதார் படிப்பில் சாதிப்பது உமக்குத் தெரியாதா?
சமையலுக்கு மட்டுமே பெண் என்ற நிலையை மாற்றி பெண்கள் சாதிப்பது உமக்குத் தெரியாதா?
தொழில்துறை, கலைத்துறை, அறிவியல்துறை, அரசியல் என்று எல்லாவற்றிலும் பார்ப்பானைவிட தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சாதிப்பது உமக்கு மறந்து போயிற்றறா?
பார்ப்பான் மற்றவர்களைவிட எதில் புத்திசாலி, திறமைசாலியாய் இன்று சாதிக்கிறான்? காட்ட முடியுமா?
அப்துல்கலாமையும், மயில்சாமி அண்ணாதுறையையும்விட எந்த பார்ப்பான் சாதித்துவிட்டான்.
வழக்கறிஞராகட்டும், நிதியாகட்டும், நிர்வாகமாகட்டும் எதில் மற்றவர்கள் சாதிக்கவில்லை?
உம் கருத்துப்படி இராணுவத்திற்கு ஷத்திரியன் மட்டுந்தானே போகவேண்டும். பார்ப்பான் ஏன் போகிறான்? உம் வாதப்படி அது தப்பாயிற்றே!
ஆட்சிக்கும் ஷத்திரியன்தானே உரியவன். பார்ப்பான் எப்படிச் செல்கிறான். வணிகம் வைசியர்க்கு உரியது என்னும்போது இன்று பார்ப்பான் வருகிறான். தொழிற்சாலைக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? தர்ப்பைப் புல்லை புடுங்கி, பூணூலைத் தடவி வேதம் படித்துக்கொண்டல்லவா இருக்க வேண்டும்.
இதில் நாய் உதாரணம் வேற! ஒரு நாயைப் பார்த்தவுடன் இது இன்ன வகை என்று சொல்ல முடியும். ஆனால் ஒரு மனிதனைப் பார்த்தவுடன் இன்ன ஜாதி என்று சொல்ல முடியுமா? பிறப்பால் திறமை கூறும் நீயெல்லாம் ஒரு சமுதாய துரோகி, சமுதாய நோய் அல்லவா? அப்படியிருக்க, உமக்கெல்லாம் கேள்வி கேட்கும் யோக்கியதை ஏது? மனிதனைப்பற்றி பேசும்போது நாய் உதாரணம் தருகிறாயே!  நீயும் மனிதனும் ஒன்றா?
இன்றைய இடஒதுக்கீடுகூட, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அமுக்கப்பட்டவர்கள் உடனடியாக உயர் ஜாதியினரோடு போட்டியிட முடியாது என்பதால்தானே ஒழிய, அவர்களுக்குத் திறமை இல்லை என்பதற்காக அல்ல. இடஒதுக்கீடு ஓர் இழப்பீட்டு உரிமை! அவ்வளவே!
உண்மை இப்படி இருக்க பிறப்புத் திறன் என்கிறாயே! உம்மையெல்லாம் மனிதன் என்றே அங்கீகரிக்க முடியாதே!
பிறப்புத் திறன்பற்றி பேசும் உமக்கு ஓர் உண்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன். பார்ப்பான் திறமையெல்லாம் சூழ்ச்சியும், பித்தலாட்டமும் மட்டுமே! மற்றபடி திறமை, அறிவுக்கூர்மை என்பதெல்லாம் அசல் மோசடி. இன்றைய சாதனைகளை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.
கேள்வி 18: ஈ. வெ. ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?
பதில் 18: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கி பரப்பலாமே. ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டே.
பெரியாரின் தொண்டர் வெளியிட்ட நூலிலே பெரியார் பாஸ்போர்ட் இல்லாமல் அயல்நாடு போனார் என்று தவறான கருத்து வெளிவந்த வரலாறு உமக்குத் தெரியாது. இதுபோன்ற தவறு நிகழக் கூடாது என்பதற்குச் சொல்லப்பட்டதே அது!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இலாப நோக்கில் நூல் வெளியிடுவதில்லை என்பது உமக்குத் தெரியுமா? தெரிந்தால் சில்லறைத்தனமாக கேட்டிருக்க மாட்டாயே!
கேள்வி 19: பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
பதில் 19: அசல் அயோக்கியத்தனமான கேள்வி இது! பூணூலும் கருப்புச் சட்டையும் ஒன்றா? கருப்புச் சட்டை ஒரு இயக்கத்தின் சீருடை. அது இழிவு நீக்கவந்த ஏற்பாடு. அது யாரையும் இழிவு படுத்தாது.
கேள்வி 20: ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?
பதில் 20: மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் கூட்டம் இந்தக் கேள்வியைக் கேட்பதுதான் வேடிக்கை! தன் வீட்டுச் சாப்பாடு, தன் பணம், பதவி – பலன் எதிர்பாராத ஆனால், இழிவு, ஏச்சு, பேச்சு எல்லாவற்றையும் ஏற்று இந்த மக்கள் சுயமரியாதையும், சூடு, சொரணையும், விழிப்பும் சமவாய்ப்பும் பெற உழைப்பவர்கள் நாங்கள். இது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நன்கு தெரியும். இந்து என்ற போர்வையில் நீங்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று கனவு காணாதீர்கள்! பார்ப்பனரல்லாதார் விரைவில் விழிப்புடன் வீறு கொண்டு எழத்தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் உங்கள் நிலை! எச்சரிக்கை!