பெரிய குஞ்சு தாத்தா…

ஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள்.

பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

“எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க”

“அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க”

“பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு சங்கடமா இல்லையா”

“அதென்னா இன்னைக்கு நேத்தா கூப்ட்றாங்க”

“ஒனக்கு இந்த பேரு புடிச்சிருக்குதா”

“ம்ம்ஹும்..புடிக்காது, வெளிலலாம் எங்கயாச்சும் ஆஸ்பித்ரிக்குலாம் போனா இந்த பேர சொல்ல மாட்டன். எனக்கு பள்ளிகொடத்துக்கு வச்ச பேரு வேற. நானும் மூனாப்பு வரைக்கும் போனனே. ரேசன் கார்டுல, ஓட்டு அட்டைலலாம் வேற பேரு தான் . இந்த பேரு கெடையாது. வெளீல யாரு கேட்டாலும் அந்த பேர சொல்லிக்குவேன்”

“சேரி..அந்த பேரு என்னா”

“மகாலிங்கம்”

😬

– இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்