நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?

வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம்.

.
ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம்
ஓடிக் கொண்டிருந்தாலும்….
மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என
ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு
ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு.
.
ஆம்…. கர்நாடக அரசின் “குவெம்பு பாஷா பாரதி”
வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகம்தான்
நம்மை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது.
.
அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா? “பெரியார் விசாரகளு”
.
அதுவாகப்பட்டது : “பெரியார் சிந்தனைகள்.”
.

நானூறு பக்கங்களில்
பெண்விடுதலை….
சமூக நீதி….
பெளத்தம்… என 52 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகளை
கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
.
கீழ்வெண்மணியில் நடந்த தலித் படுகொலைகளைக் கண்டித்து
28.12.1968 விடுதலை நாளிதழில் வெளிவந்த
தலையங்கத்தையும் தேடிப்பிடித்து சேர்த்திருப்பது
வரலாற்றைப் படிக்காமலே வரலாற்றைப் படைக்க நினைக்கும்
சிலருக்கு பாடமாக இருக்கும்.
.
இந்நூல் வெளிவருவதற்குப் பின்னணியில் இருந்தவர்தான்
கன்னட பேராசிரியரான கே.வி.நாராயணா.
ஹம்பி பல்கலைக் கழகத்தில் ஒன்பதுமுறை
பதிவாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
அத்தோடு சமஸ்கிருதக் கலப்பில்லாத
கன்னட மொழி வளர்ச்சிக்காக உழைத்து வருபவர்தான்
இந்தக் கே.வி.நாராயணா.
.
பெரியாரின் சிந்தனைகளை
கன்னட மக்களுக்குக் கொண்டு செல்லும் பணிக்கு
பதிப்பாளராகத் துணை நின்றவர்
திராவிடப் பல்கலைக் கழகத்திலும்,
பெங்களூர் பல்கலைக் கழகத்திலும்
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய
கார்லோஸ் என்றழைக்கப்படும் பேராசிரியர் தமிழவன்.


.
பலருக்கும் முன்பாகவே எண்பதுகளில்
அமைப்பியல்வாதத்தினை (Structuralism) தமிழகத்தில்
அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்தான்
நவீன இலக்கியவாதியான தமிழவன்
.
பெரியாரை கன்னட அறிவுஜீவிகளும் புரிந்து கொள்ளும் வகையில்
கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சிவலிங்கம்.
.


சிவலிங்கம் தமிழ் பேராசிரியர் மட்டுமில்லை.
கர்நாடக தலித் மக்களின் விடுதலைக்காக
“ஸ்வாபிமானி தலித் சக்தி” என்கிற இயக்கத்தினை
முழுவீச்சோடு நடத்தி வருபவர்.
.
நரபலி கொடுக்கப்பட்ட தலித் இளைஞனின் கொடூரக் கொலையை
உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த துணிச்சல்….

காதலுக்குத் துணை நின்ற தலித் பெண்ணை
நிர்வாணமாக ஓடவிட்ட கொடூர முகங்களைத் தோலுரித்த துணிவு….
என சிவலிங்கத்தின் பெயரைக் கேட்டாலே கர்நாடக அரசு கதிகலங்கும்.
.
(கடந்தவாரம் பெங்களூரு சென்றபோது
சிங்கிளாக எம்மைச் சந்தித்த இந்த சிங்கத்தைப் பற்றிப்
பின்னர் விரிவாக எழுதுகிறேன்…
.
பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் சுழன்று கொண்டிருக்கும்
இவருடன் கதைக்க விரும்புபவர்கள்
முன்னரே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அழையுங்கள்: 09886346428 )
.
ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக்காக உழைத்துவரும்
இவரோடு மொழிபெயர்ப்பில் கைகோர்த்த மற்றொருவர் நல்லதம்பி.
.
இன்று இவர்கள் விதைத்த விதை
மரமாகி
கிளை பரப்பி
கனி தரும்போது….

கன்னட மக்கள் தங்களது உண்மையான நண்பர்கள் யார்?
தங்களைத் தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?
என்பதை துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள்.
.
( நன்றி: டுபாக்கூர் பக்கங்கள் – குமுதம் வார இதழ் )