குலுங்கிக் குலுங்கி அழுத காமராஜர்!

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தனது இல்லத்தில் கண் மூடி படுத்திருக்கிறார் பெருந்தலைவர் காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதி காக்கிறார் தோழர் (பெயர் நினைவில் இல்லை). காமராசரின் கண் இமை ஓரத்தில் நீர் வடிகிறது. சில நிமிட அமைதி!. படுக்கையை விட்டுத் திடீரென எழுந்து ஆக்ரோஷமாக சத்தமிடுகிறார் காமராசர். யார் இருக்கான்னேன்? இனி எந்த நாதி இருக்குன்னேன்? தமிழனுக்காக குரல் கொடுத்த அந்தக்குரலும் போய்விட்டதே என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு இரங்கற்கூட்டம் இராஜாஜி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட “காமராஜர் பெரியாரின் வரலாறு தான் தமிழகத்தின் வரலாறுன்னேன். தமிழகத்தின் வரலாறு தான் பெரியாரின் வரலாறுன்னேன்” என்றார்.

தகவல்: கி.தளபதிராஜ்