Tag: பார்ப்பனர்

  • ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில் ஜெயலலிதா மீதான தனி நபர் வழிப்பாட்டுக்கு ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம். அவர் இயக்கத்தை சர்வாதிகாரியாக இருந்து நடத்தினாராம், பொதுக்…

  • பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

    பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

    மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…

  • கொட்டை எடுத்த புளிகளுக்கு…

    கொட்டை எடுத்த புளிகளுக்கு…

    ஆர்.எஸ்.எஸ் – போலி தமிழ்த்தேசிய கூட்டு அம்பலம்! ———————————————————————– இந்த Krishna Tamil Tiger என்கிற தமிழ் புளி தான் ஒரு அரைகுறை என்பதை அவரே அவ்வப்போது நிருபித்துக்கொண்டே இருப்பார். காஞ்சி சங்கராச்சாரி காலடியில் இந்தியாவின் மத்திய அமைச்சராக இருக்கிற பொன்.இராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கும் படத்தையும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிய சாமி நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒப்பிட்டு தோழர்கள் சிலர் பதிவுகளை எழுதியிருந்தார்கள். அறியாமையில் இருக்கும் இந்து மத பக்தர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆதரவாளர்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத…

  • டிஜிட்டல் பார்ப்பனீயம்

    டிஜிட்டல் பார்ப்பனீயம்

    ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள். 1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான். 1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக…

  • திமிர்: மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?

    நாளை திருவோணம் பண்டிகையாம்! மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந்தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்ணு “வாமனன்” அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்ணு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தமரானார். அதைக்கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை…

  • அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை !

    அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை அறுபது ஆண்டு கால தொடர் போராட்டம்! அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம்! சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!. பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம்.அய்.பி.எஸ் ஆகலாம் குடியரசுத் தலைவராகலாம்.ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன நியாயம்? “தீண்டாமை தண்டிக்கப்படவேண்டிய குற்றம்” என்று சொல்லும் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கோவில் கருவறைக்குள் பிராமணரல்லாதார் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுவிடும் என வைகாசன ஆகமம் கூறுவதை உள்ளடக்கியதாக இருக்கும் 25,26…

  • அம்மனக்கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!

    “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசன்னன்” என்பதுபோல் ஆனந்த விகடனுக்கு தலைகொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரனையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ஆனந்த விகடனின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.   (குடிஅரசு -10.10.37) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத்துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனை கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்! முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு…