Category: நடப்பு

  • இந்து நாளிதழ் திருமா பேட்டி! -ஒரு விமர்சனம் கி.தளபதிராஜ்

    தோழர் திருமா அவர்களுக்கு, வணக்கம்! இன்றைய ‘இந்து’ தமிழ் நாளி தழில் மூன்றாவது நாளாக உங்கள் பேட்டி வெளிவந்துள்ளது. அரசியல் களத்தில், மாற்றுத் தளத்தில் நின்றாலும், மாறாத கண்ணியத்திற்கு சொந்தக்காரர் என நிரூபித்திருக் கிறீர்கள். தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணி களிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கலைஞர், ஜெயலலிதா இருவரும் எப்படி? ஜாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு…. ‘ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கவோ, நீண்ட நேரம் உரை யாடவோ வாய்ப்பே கிடைத்த…

  • “கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து

    “கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து

    தமிழர்கள் உலகில் பத்துக் கோடி என்று சொல்வார்கள். சீமானின் மரபணு சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து, மற்றவர்களை கழித்து விட்டால் கூட, ஒரு ஆறு கோடி வரும். எப்படிப் பார்த்தாலும் உலகில் தமிழர்கள் ஒரு பெரிய இனம். பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றை பேசுகின்ற இனம். அறிவு வளம் மிக்க பலரைக் கொண்டிருக்கும் ஒரு இனம். இந்த இனம் போரில் எப்படித் தோற்றது என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்த 7 ஆண்டுகள் ஆன…

  • சிறுத்தையே வெளியில் வா!

    சிறுத்தையே வெளியில் வா!

    பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப் பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென் பார்எனில், வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற்…

  • இளித்தது பித்தளை!

    இளித்தது பித்தளை!

    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணலில் கையாண்ட ஊடக தர்ம மீறல். இராமகோபாலன், எச்.ராஜா இத்யாதிகளிடம் காட்டிய இனப்பாசம். இந்துத்துவ மதவெறிசக்திகளுக்கு துணைபோகும் தொடர் போக்கு. பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்த இது போன்ற நிகழ்வுகளால் பாண்டேவின் முகத்திரை கிழிந்து “ஆயுத எழுத்து” நெறியாளருக்கே ஒரு சுயபரிசோதணை செய்து வைக்க வேண்டிய நிலைமை தந்தி நிர்வாகத்திற்கு ஏற்பட, பாண்டேவை சுபவீ கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. சுபவீ யின் கேள்விகளுக்கு தன்பக்கம் நியாயம் இருப்பதைப்போல்…

  • வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!

    வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!

    – பூமியை பாயாச் சுருட்டிகினு கடலுக்குள்ளார போயிட்டான் பாழாப்போன அசுர பய ஒருத்தன். பாப்பானெல்லாம் பெட்டிஷன் போட, விஷ்ணு அடுத்த செகன்ட் பன்றி கெட்டப்புல கடல்ல பாஞ்சி அவனை கைமா பண்ணிட்டு பூமியை இஸ்துகினு வந்து பழையபடி விரிச்சுட்டார். விரிச்சதுதான் தாமதம், பூமிக்கு விஷ்ணு மேல லவ்வுன்னா லவ்வு, அப்படி ஒரு லவ்வு பத்திகிச்சு. சும்மா இருப்பாரா விஷ்ணு ? கசமுசா ஆக பூமாதேவி நரகாசுரன்கிற பிள்ளைய பெத்துப்புட்டா. பார்ப்பானர்கள் கிட்டயே நரகாசுரனும் வம்புக்குப் போக அவனுங்க மறுபடியும்…

  • தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவ 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்கநாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேணாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம். நீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாயரும்,தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? நீதிக்கட்சியினர் திராவிடர்…

  • கச்சதீவை கலைஞர் கொடுத்தாரா?

    கச்சதீவு கலைஞரால் தான் தாரை வார்க்கப்பட்டது என்று பொய்யும் புரட்டும் பேசிவருபவர்களுக்கு கச்ச தீவை மீட்டெடுப்பதற்காக தற்போது ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வைத்த வாதமே “கலைஞருக்கும் கச்ச தீவு நம் கைவிட்டு போனதற்கும் சம்மந்தமே இல்லை” என்று நிருபணமாகிறது. தமிழக அரசு எடுத்து வைத்த வாதம் இதுதான் ——————————————————————————– “மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு வேறு நாட்டுக்கு வழங்கினால் அது…