Category: திராவிடம்

  • வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் – 26)

    எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாணசுந்தரனார் 137 ஆம் பிறந்த நாள். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு இதே நாளில் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில் விருத்தாச்சலம் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பூர்வீகம் திருவாரூர்…

  • பொருளாதார அளவுகோல் என்னும் கண்ணிவெடி யால் தகர்க்கப்படும் சமூகநீதியை மீட்டெடுக்க மண்டல் பிறந்த நாளில் சூளுரைப்போம்!

    உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு வெற்றி கிட்டும்வரை போராடுவோம்! இன்று (25.8.2020) இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக பொறுப்பேற்றுச் செயலாற்றிய – பீகாரின் முன்னாள் முதல்வரும், வழக்குரைஞருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களது 103 ஆவது பிறந்த நாளாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டின் பெரும்பான்மையினரான ஒடுக் கப்பட்ட மக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, உத்தியோக வாய்ப்பினை – மறுக்கப்பட்ட உரிமைகளை –…

  • எதிரிகளே, எதிரிகளே! என் மீது சாயம் பூசுங்கள்!

    அப்போதுதான் என் பிள்ளைகளுக்கு ரோசம் வரும்! அப்போதுதான் என் பேரப்பிள்ளைகள் வெகுண்டு எழும்! அப்போதுதான் என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு என்னைப் பற்றி அறிய முடியும்! எதிரிகளே எதிரிகளே! எனக்குச் செருப்பு மாலை போடுங்கள்! அப்போதுதான் தூங்கிக் கிடக்கும் என் மக்கள் துள்ளி எழுவார்கள்! எதிரிகளே எதிரிகளே! என் சிலைகளை உடையுங்கள்! அப்போதுதான் உங்கள் முதுகுப் பூணூலும் அறுக்கப்படும், முதுகெலும்பும் உடைக்கப்படும்! எதிரிகளே எதிரிகளே! அப்படியே ஒன்று செய்யுங்கள் உங்கள் அடிமைகளிடம் சொல்லி வையுங்கள்! பெரியாரின் பிள்ளைகளின்,…

  • பெரியார்

    எனக்குப் பெரியாரை பிடிக்கும் என்பதில் யாருக்கு என்ன பிரச்சனை? தொடர்ந்து பலர் என்னிடம் “பெரியார் ஒண்ணும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை”, என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அப்படி முயல்கிறவர்கள் கோபமாக, ஆத்திரமாக, சில சமயம் அநாகரிகமாக கூட அவர்களது வாதங்களை முன் வைக்கிறார்கள். மிகவும் கூர்ந்து கவனித்தால் இவர்கள், ஏதோ காரணத்திற்காக தனக்கோ, தன் இனத்திற்கோ ஏதோ அநீதி இழைக்கபட்டதாக நினைக்கிறார்கள். உண்மையிலேயே பெரியார் அப்படி எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்தாரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது.…

  • பெரியார்

    ஆரியச் சாக்கடையில் அறிவு தொலைத்த எம் மக்களின் புத்தியை சுத்தம் செய்ய வந்த ஈரோட்டு சானிடைசர்! சனாதன தர்மமென்று எம்மைச் சூத்திர பஞ்சமனாக்கிய கயவர்களின் தோலுரித்த கருப்புச் சாட்டை! வேத ஆகமங்களைக் காரணம் காட்டி மூடிய கருவறைக் கதவுகளின் சூழ்ச்சியை உணர்த்திய பேரரக்கன்! தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டென ஆரியம் மூட்டிய தீண்டாமைத் தீ அணைக்கப்பொங்கி எழுந்த பகுத்தறிவுப் பேரலை! அன்றாட வாழ்வியலோடு நகமும் சதையுமாய் ஒன்றிக் கிடந்த மூடப் பழக்கங்களைக் கொத்தாய் அகற்றிய ஜேசிபி! அக்கிரஹாரத்திற்குள்…

  • பெரியார் பெரியாரே!

    1968 டிசம்பர் 28 ஆம் நாள் அனலாய் விடிந்தது! முதல்நாள் இரவு கீழ்வெண்மணியில் தின்று தீர்த்த தீயில் பொசுங்கினர் 44 விவசாயத் தோழர்கள்! தமிழக விவசாயத் தோழர்களையெல்லாம் தீண்டி அவர்தம் இதயங்களையெல்லாம் சுட்டது! கண்களிலெல்லாம் கடப்பாறையாகப் பாய்ந்து கண்ணீரைக் கொட்ட வைத்தது!  இந்த விசயத்தில் தீயவர்களைத் தூண்டிவிட்டு எரியூட்டிய நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவைவிட பெரியார் மீது எரிந்து விழுந்தனர் உண்மை புரியாத சிலர். பெரியார் விவசாயத் தொழிலாளர்களிடையே பிளவு ஏற்படுத்தி, திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் என்பதை…

  • தந்தைபெரியாரின் பொதுவுடைமை

    பெரியார் யார்? பார்ப்பனப் புகட்டுக்கு எதிர்ப்பாளர்… கடவுள் மறுப்பாளர்… சாதி எதிர்ப்பாளர்…. சாதி இருக்கும் வரை  எல்லா சாதியினருக்கும் சம உரிமை கோரியவர்… சுயமரியாதைக்காரர்….. பெண்ணுரிமை பேசியவர் … அனைத்திலும் சமத்துவம் வேண்டிய பொதுவுடைமையாளர்! இப்படி பன்முகம்  கொண்ட ஈரோட்டு வைரம் அவர்! சோவியத் யூனியனின் கம்யூனிசப் புரட்சியை, அதன் ஆரம்ப நாட்களிலேயே வரவேற்றுப் பாராட்டியவர். அவர் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்தபோதே, பொதுவுடைமைக்கான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். கம்யூனிசத்தின் அடிப்படைகளை தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலருடன் விவாதித்து வந்தார்.…