இளித்தது பித்தளை!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணலில் கையாண்ட ஊடக தர்ம மீறல்.
இராமகோபாலன், எச்.ராஜா இத்யாதிகளிடம் காட்டிய இனப்பாசம்.

இந்துத்துவ மதவெறிசக்திகளுக்கு துணைபோகும் தொடர் போக்கு.

பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்த இது போன்ற நிகழ்வுகளால் பாண்டேவின் முகத்திரை கிழிந்து “ஆயுத எழுத்து” நெறியாளருக்கே ஒரு சுயபரிசோதணை செய்து வைக்க வேண்டிய நிலைமை தந்தி நிர்வாகத்திற்கு ஏற்பட, பாண்டேவை சுபவீ கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

சுபவீ யின் கேள்விகளுக்கு தன்பக்கம் நியாயம் இருப்பதைப்போல் போக்கு காட்டினாலும் பெரும்பாலும் மழுப்பலாகவே இருந்தது பாண்டேவின் பதில்கள்.

பளபளக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எத்தனை பாலிஷ் போட்டாலும் பித்தளை இளிக்கத்தானே செய்யும்.

இந்த நிகழச்சியைப் பார்த்த பொழுது, தந்தை பெரியார் அவர்கள் சொல்லும் ஒரு கதைதான் நினைவிற்கு வருகிறது.

விருந்திற்கு வந்த மாப்பிள்ளையின் வாய் நாற்றத்தை சகிக்க முடியாத மாமியார், மருமகனிடம் “இந்த ஊர் கரும்பு பேர்போனது. தின்று பார்த்து வீட்டிற்கும் வாங்கி வாருங்கள்” என்று சொல்லி காசு கொடுத்து அனுப்பி வைத்தாள். வீடுதிரும்பிய மாப்பிள்ளை கொடுத்தனுப்பிய காசுக்கு எல்லுப்புண்ணாக்கு வாங்கி தானும் தின்று விட்டு வீட்டுக்கும் வாங்கிவந்தானாம்!

# இந்தக் கதையோடு நேற்று சுபவீ யின் கேள்விகளுக்கு பாண்டே பதிலளித்த விதத்தையும் சேர்த்து கொஞ்சம் நினைவில் அசைபோட்டுப் பாருங்கள் தோழர்களே!

-கி.தளபதிராஜ்