வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!


பூமியை பாயாச் சுருட்டிகினு கடலுக்குள்ளார போயிட்டான் பாழாப்போன அசுர பய ஒருத்தன். பாப்பானெல்லாம் பெட்டிஷன் போட, விஷ்ணு அடுத்த செகன்ட் பன்றி கெட்டப்புல கடல்ல பாஞ்சி அவனை கைமா பண்ணிட்டு பூமியை இஸ்துகினு வந்து பழையபடி விரிச்சுட்டார்.

விரிச்சதுதான் தாமதம், பூமிக்கு விஷ்ணு மேல லவ்வுன்னா லவ்வு, அப்படி ஒரு லவ்வு பத்திகிச்சு. சும்மா இருப்பாரா விஷ்ணு ? கசமுசா ஆக பூமாதேவி நரகாசுரன்கிற பிள்ளைய பெத்துப்புட்டா. பார்ப்பானர்கள் கிட்டயே நரகாசுரனும் வம்புக்குப் போக அவனுங்க மறுபடியும் பெட்டிஷன் போட்டுட்டானுங்க.

நரகாசுரனை வீழ்த்த எவ்வளவோ ட்ரை பண்ணியும் விஷ்ணு வால முடியலை. பெத்த புள்ளையையே கொல்ல விஷ்ணுவால முடியலைங்கிற செய்தி விஷ்ணுமேல அவன் பொண்டாட்டிக்கு சந்தேகத்தை உண்டாக்கிருக்கும் போல. அவளே நேரடியா கலத்துல இறங்கி சக்காளத்தி (பூமாதேவி) புள்ளைய கொன்னுட்டா.

அவன் செத்த நாளை சந்தோஷமா எண்ணெய் வச்சு தேச்சு குளிச்சிகினு சோக்கா டிரஸ் பண்ணிக்கினு நாஸ்தா பண்ணனும்பா. இதான் தீபாவளி!

# பூமி உருண்டையாச்சே? அதை எப்படி பாயா சுருட்ட முடியும்? கடலும் பூமிக்குள்ள தானே இருக்கு! பூமியை எங்க நின்னுகிட்டு சுருட்டுனான்? அசுரன்னா திராவிடன் னு சொல்றாங்களே ?நம்மாளு செத்த நாளை நாமே கொண்டாடுறதா? இப்படியெல்லாம் யோசிச்சீங்கன்னா நீங்க காலத்துக்கும் தீபாவளியே கொண்டாட முடியாது. பேசாம “மூளை”யை கழட்டி ஒரு மூலையில வச்சிட்டு நாலு வெடியை பத்தவச்சமா, கறிசோறு திண்ணமான்னு விழாவை கொண்டாட பாருங்க. “கறிசோறு”ன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு மாட்டை கீட்டை அடிச்சுடாதீங்க. நாளும் கிழமையுமா பாசக்கார பயலுவோ, “எங்க மாதாவ ஏன்டா அடிச்சே?”ன்னு வரிஞ்சுகட்டிக்கிட்டு வந்துடப்போறானுங்க!.

– கி.தளபதிராஜ்