உள்ளூரில் போனியாகாத உற்சவப்பெருமாள்! கி.தளபதிராஜ்

திருப்பதி மூலவர் தன் திருநாமத் திலேயே “நித்யகல்யாணப்பெருமாள்” என  பெயரைக் கொண்டுள்ளதால், அவரைத் தரிசிக்கும் பக்தர்களின் திருமணத் தடை நீங்கும் என்பது அய்தீகமாம். சமீப ஆண்டுகளாக திரு மலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை யைப் போக்கவும, பக்தி மார்க்கம் செழிக்கவும், கல்யாண சிறீநிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறதாம்.

அப்படி ஒரு வைபோக நிகழ்ச்சி மயிலாடுதுறைக்கு அருகே ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் 24.3.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமாள் பெயரில் அர்ச்சகர் தாலியைக் கட்ட வாண வேடிக்கை காட்டப்பட்டது. நிகழ்ச்சியை வர்ணனை செய்பவர் “கோவிந்தா” “கோவிந்தா” என அழைக்கு மாறு ஒலிபெருக்கியில் அறிவித்ததையும் கவனிக்காமல் பக்தர்கள் மெய்மறந்து வாண வெடிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

“கோவிந்தா” சத்தம் வேகமாக எழாததைக் கண்டு கடுப் பாகிப்போன வர்ணனையாளர் “பத்துபேர் கூட ‘கோவிந்தா’ போட்ட தாக தெரியவில்லை. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ!

சேர்ந்து சொல் லுங்கோ! ”  என மீண்டும் மீண்டும் அறிவித்ததை பார்க்கும்பொழுது பரிதாபமாக இருந்தது. சிறீதேவியையும், பூதேவியையும் ஒரே நேரத்தில் மணந்த பெருமாளையும், பெருமாளுக்காக தாலிகட்டிய அர்ச்சகரையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தவர்களில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், என அரசுத்துறை அதிகாரிகளும் அடக்கம்.

யார் இந்த பெருமாள்?

மேகநாதன் என்ற அசுர (பார்ப்பனரல்லாத) மன்னனுக்கு பிறந்த பலி  நீதிதவறாமல் ஆட்சி நடத்தி வந்தான். அப்போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள், தேவர் களுடன் (பார்ப்பனர்களுடன்) போரிட அவனை அழைக்க, பலி மறுத்து விட்டதால், அவர்கள் மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலி யிடம் சரணாகதி அடைந் தனர்.

அவர்களுக்காக பலி தேவர் களுடன் போராடி வெற்றிபெற்றான். தேவர்களுடன் போரிட்ட காரணத் தினால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க பலி கடும் தவம் புரிந்ததான். அவனது தவத்தை மெச்சிய பெருமாள் ஆதிவராக மூர்த்தியாக காட்சியளித்து பலிக்கு மோட்சமளித் தாராம்.

ஆக பார்ப்பனரிடம் போரிட்டதற்காக வருந்தி தன் பாவம் நீங்க தவம் புரிந்தற்காக அவன் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த காட்சிதான் ஆதிவராகமூர்த்தி. புராணப்புழுகிலும் பார்ப்பான் எவ்வளவு தெளிவாக எழுதி வைத்திருக்கிறான் என்பது புரிகிறதா? பார்ப்பனர்களிடம் போரிடுவதே தெய்வக்குற்றமாம்!

நித்யகல்யாண கூத்து!

அப்படி ஆதிவராகமூர்த்தியாக பெருமாள் காட்சி புரிந்த தலத்தில் ஒரு முனிவரும் அவரது மகளும் சொர்க் கத்தை அடைவதற்காக தவம் இருந்தன ராம். சொர்க்கத்தை அடைவதற்கான “கடவுச்சீட்டு” அவரது மகளுக்கு முதலில் கிடைத்தும், அவள் திருமணம் ஆகாதவள் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.

பூலோகத் தில் இருந்த முனிவர்களிடம் நாரதர் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்ட காலவரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. முனிவர் தனக்குப்பிறந்த 360 பெண்களையும் திருமணம் செய்துகொள்ளுமாறு  பெருமாளிடம் வேண்டினார். பெரு மாள் ஒரு அழகிய இளைஞன் வடி வத்தில் பூலோகம் வந்தார்.

அந்த இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு பெண் வீதம் 360 நாட்களும் பிரம்மசாரியா கவே வந்து அப்பெண்களை மணம் புரிந்தான். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்பது இதுதானோ?. கடைசி நாளன்று அவர்கள் அனை வரையும் ஒன்றாக்கி அப்பெண்ணிற்கு அகிலவல்லி நாச்சியார் என பெயரிட்டு தன் சுய உருவமான வராக (பன்றி) ரூபத்தைக் காட்டினானாம்.

நல்ல வேளை திருமணத்திற்கு முன்னால் பெருமாள் தன் பன்றி உருவத்தை காட்டவில்லை. 360 கன்னியர்களும் சேர்ந்திருந்தால் ஆதிவராகமூர்த்தி கதி அன்றைக்கே அதோகதியாகியிருக்கும்.

பெருமாள் நிலை!

கிபி 15ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை விஜயநகர பேரரசர்கள் ஆண்டு கொண்டிருந்த சுமார் நூறு ஆண்டுகள்தான் இந்த திருப்பதி மலை பூஜை, புனஸ்காரம் என்று இருந்திருக்கிறது. பின்னர் பெருமாள் கேட்பாரற்று கிடந்திருக் கிறார்.

18ஆம் நூற்றாண்டில் ஆட்சி யைப்பிடித்த கிழக்கிந்திய கம்பெனிகள் மலேரியா நோயை பரப்பும் கொசுக்கள் அங்கு அதிகம் பரவியிருப்பதைக் சுட்டிக் காட்டி திருமலைக்குச் செல்வதற்கே தடைவிதித்தது. அங்கிருந்த புரோகி தர்களையும் மலையடிவாரத்திற்கு வரும்படி எச்சரிக்க, அவர்களில் பலரும் மூட்டை முடிச்சை கட்டிவிட்டனர்.

மராத்தியர் காலத்திலும் இதே நிலை தான் தொடர்ந்திருக்கிறது. பின்னர் பல ஆண்டு காலம் திரும்பிப்பார்க்கவே ஆளில்லாமல் முட்புதர் மண்டிக்கிடந்த திருப்பதி மலை செப்பனிடப்பட்டு மீண்டும் பக்தர்கள் சென்று வர ஆரம் பித்தனர். இந்த நிலையில் சில ஆண்டு களுக்கு முன்னர் தினமலரில் வந்த ஒரு செய்தி மீண்டும் பெருமாளின் மவுசு குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.

தினமலர் செய்தி (17.2.2011) !

“திருப்பதி திருமலையில் உற்சவராக எழுந்தருளும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரான சீனிவாச பெருமாளுக்கு, தினமும் நித்ய கல்யாண உற்சவம் நடத்தப் படுகிறது. முன்னதாக, வெங்கடேச பெருமாள் கோவில் பிரதான வாயிலில், தினமும் அதிகாலை மாவிலை, வாழை மரம் கட்டி தோரணங்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

ஆனால் நேற்று முன் தினம் பிரதான வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மற்றும் மாவிலைகள், உலர்ந்து முற்றிலும் வாடிய நிலையில் இருந்ததைக் கண்டு, பக்தர்கள் அதிருப்தி யடைந்தனர். தினம் காலையில் முறைப்படி புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்” என்று 2011 பிப் 17ஆம் நாள் தினமலர் வெளி யிட்டிருந்த செய்தியை பார்த்தவர் களுக்கு நித்ய கல்யாணத்தைப் பார்க்கும் கூட்டம் குறைந்து தினசரி வரும்படி குறைந்ததால் ஏற்பட்ட விளைவை புரிந்து கொள்ள முடியும்.

உள்ளூரில் சரக்கு போனியாகாததால் மலைய பெருமாளை நம்பாமல் மலேரியா காய்ச் சலுக்கு பயந்து மலையடிவாரத்திற்கு பாய்ந்த பரம்பரை இப்போது பெரு மாளையே ஊர்ஊராக இழுத்துவந்து கல்யாண வேடிக்கை காண்பித்துக் கொண்டிருக்கிறது. இப்படி பெருமாளை கொண்டு வருவதற்கு திருப்பதி தேவஸ் தானத்திற்கு பல லட்சரூபாய்களை கட்டவேண்டும் என்று சொல்லப்படு கிறது.

அதோடு இரவை பகலாக்கிய மின்னொளி, நவீன தொழில் நுட்பத் துடன் பெருமாள் கல்யாணம் பக்தர் களுக்கு டிஸ்பிளே, என செலவு கோடியைத் தாண்டக்கூடும். பொருளா தார விரயத்தோடு காலத்தையும் விரயம் செய்யும் இது போன்ற விழாக்களை நடத்த அனுமதிப்பது சரிதானா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக்கூத்தை காண படித் தவர் முதல் பாமரர் வரை கூடுவதுதான் மிகுந்த வேதனை.