நூல்: சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்

சாதிச் சழக்குகள் – வெளியும் வேலிகளும்
ஆசிரியர்: தி.சு. நடராசன்

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட். 41 – பி,
சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600 098

பக்: 32 விலை ரூ. 20/-

மனிதர்கள் வாழிடங்கள் மற்றும் வைதிக மரபி னால் எப்படி மன்னராட்சி காலத்தில் பிரித்து வைக்கப்பட்டனர். அரசு அதிகாரமும், பிராமணியமும், வைதிகமும், மனுவும், கீதையும் இணைந்து மண், உழைப்பு , உற்பத்தி, வியர்வை இவற்றை எப்படி அடிமைப்படுத்தின என் பதை குறைந்த பக்கங்களில் இந்நூல் சொல்ல முயற்சிக்கிறது.சாதிக் கலவர கூத்துகளை அதற்கு பின்னால் இருந்து இயக்கும் பெரிய மனிதர்களை இந்நூல் பட்டியலிடுகிறது. சாதியை வேரோடும், வேரடிமண்ணோடும் வீழ்த்த இந்நூலும் ஒரு ஆயுதமாகும். சாதி அமைப்பு உயர் சாதியால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. ஆனால் சாதிச் சண்டைகள், பெரும்பாலும் அடித்தளத்தில் தான் நடக்கிறது. ஏன் இந்தச் சூழல்? இந்நூல் அது குறித்து பேசுகிறது. சாதிக்கு எதிராக பல கோணங்களில் நாம் சிந்தித்தாக வேண்டும்; செயல்பட்டாக வேண்டும். இந்நூல் ஒரு பாதையில் பயணிக்கிறது.

நன்றி: தீக்கதிர், 08-06-2014