Month: March 2014
-
டிஜிட்டல் பார்ப்பனீயம்
’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள். 1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான். 1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக…
-
பேரறிவாளனை திராவிடர் கழகம் கைவிட்டதா?
கேள்வி : பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் சமிபத்தில் அளித்த பேட்டியில், என் மகன் கைது சம்பவத்தின் போது திராவிடர் கழகம் எங்கள் குடும்பத்தை கை விட்டுவிட்டது என்று குற்றம் சொல்லியிருக்காரே? பதில்: அது அவரது ஆதங்கமாக இருக்கலாம். குற்றசாட்டாக ஏற்க முடியாது . ராஜீவ் வழக்கை 23 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைமையை வைத்து கருத்து சொல்லகூடாது. சம்பவம் நடந்தபோது ‘ராஜீவ் கொலையில் கருணாநிதிக்கு சம்பந்தம் இருக்கிறது ‘ என்று பிரச்சாரம் செய்தார்கள். அதனால்தான் தி.மு.க கொடிக்கம்பங்கள்…