Day: October 16, 2013

  • மத அழைப்பாளரா பெரியார்? கி.தளபதிராஜ்

    மத அழைப்பாளரா பெரியார்? கி.தளபதிராஜ்

    மானுட சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதே தன் வாழ்நாள் பணியாய்க் கொண்டு, கடவுள் மத சாதித் தடைகளை தகர்த்தெரிந்து சமத்துவசமுதாயம் படைக்க, தள்ளாத வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்தபடி சுற்றிச்சுற்றி தொண்டாற்றிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் உலகத் தலைவர் பெரியார்!. மானுடப்பற்றைத் தவிர வேறு எதன்மீதும் எனக்குப் பற்று இல்லை என பறை சாற்றியவர்!.சமூக நீதிக்குரல் எழுப்பி 1925ம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், சாகும் தருவாயிலும் தான்…