Month: April 2013

  • தலைவாழை இலை போட்டு அதில் கொஞ்சம் மலம் வைத்து…

     பாலாவின் பரதேசி படம் பார்த்தேன். செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும்  அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு  அருமையான விருந்து படைத்திருந்தார் பாலா! விருந்தை சுவைக்க முற்பட்டபோதுதான் இலையின் ஓரத்தில் மலம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பாலாவிற்கு என்னவாயிற்று? கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு பெருமளவு கல்வி வழங்கியது கிறுத்துவ மிஷன்கள்தான் என்றால் மிகையாகாது. பிளேக் நோய் பரவியபோது மக்களைக் காப்பாற்ற பெருமளவு கிறுத்துவ பாதிரியார்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அந்தத்தொண்டில் பலர் மதம் மாறியிருக்கலாம்.மாற்றப்பட்டும் இருக்கலாம். ஆனால் இந்துத்துவாவின் ஊதுகுழலாய் மாறி பாலா இப்படி ஒரு…

  • ஆ.வி மறந்தது/ மறைத்தது/ சொல்லாமல் விட்ட செய்திகள்

    ஆனந்த விகடன் இந்த வாரம் அப்பட்டமாக ஜெ.புராணம் பாடியிருக்கிறது; இன்னும் ஏதாவது கெட்ட பெயர் வாங்காமல் இருந்தால் (அவ்வளவு நம்பிக்கை) இப்போதைய சூழலில் ஜெ ஹோ… ஜெயா ஹோவாம். டெசோ போராட்டத்தின் எதிரொலிதான் ஜெ.விடம் மாற்றம் என்ற தற்காலிக நாடகம். இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாத ஆ.வி.யின் நடுநிலை மீண்டும் நாறியிருக்கிறது. மாணவர் போராட்டத்தை ஆதரித்தார் என்று அப்பட்டமான புளுகு. மாணவர் போராட்டத்தை பல வழிகளிலும் ஒடுக்கியவர் ஜெ.போலீசை விட்டுத் தக்கியவர்; மாணவர்களின் சுயவிவரங்களைக் கேட்டு…