குஷ்பு புடவையும் குமுறும் கடவுளும்!

கிருஷ்ணன்:
கோபியர் கொஞ்சி
நாளாச்சு!
அவதாரம்
தரித்தகாலம்
அழிஞ்சே போச்சு!
குஷ்பு புடவையில்
நான் தான்!
நினைக்கையிலே
தேன்தான்!
இராமன்:
மயக்கம்
தீரலையோ?
மன்மதா!
பக்தனெல்லாம்
படைதிரட்டி
நிற்கிறான்!
ஏகபத்தினி விரதன்
ராமன்! -குஷ்பு
தேகம் சுத்தும்
சேலையிலா?
விலாநோக
விம்முகிறான்!
விவரங்கெட்ட
பக்தன்.
தூணிலும்
துரும்பிலும்
இருக்குமெனக்கு
குஷ்பு
துணியிலிருக்க
உரிமை இல்லையா?
ஆதாரத்தோடு
ராமன் கேட்க
ஆத்திரத்தோடு
நுழைந்தார்
ஆஞ்சநேயர்!
ஆஞ்சநேயன்:
அடே ராமா!
ஆண்டு அனுபவித்த
அதிர்ஷ்டகட்டைகள்
நீங்கள்!
அடியேன் கதை
அப்படியா?
அடித்தது அதிர்ஷ்டம்
என்றிருந்தேன்!
கட்டும் புடவையில்
கட்டை பிரம்மச்சாரியா?
கழட்டு என்றே
கறைகின்றான்!
அவன்மட்டும்
அடிஷனல் வைத்து
அலைகின்றான்!
ராமன்-கிருஷ்ணன்-
ஆஞ்சசேயன் மூவரும்:
பறிக்காதே!பறிக்காதே!!
ஆண்டவன் உரிமையை
பறிக்காதே!
எங்கள் உரிமை!
எங்கள் உரிமை!!
தூணில் இருப்பதும்
துணியில் இருப்பதும்
எங்கள் உரிமை!
எங்கள் உரிமை!!
பறிக்காதே!பறிக்காதே!!
ஆண்டவன் உரிமையை
பறிக்காதே!