தகத்தகாய சூரியன்

2G: வானத்திற்கும் பூமிக்கும் குதித்த PG-க்களே….

– சிவசங்கர் (குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

2010 ஆம் ஆண்டு… சிஏஜி அறிக்கை வெளியாகியிருந்த நேரம். இணையத்தில் பொழுதுபோக்கிற்கு உலவுகிற முகமற்ற விமர்சகர்கள் முதல் இந்தியாவின் உயர்ந்த அமைப்பு என்று சொல்லிக் கொள்ளக் கூடிய உச்ச நீதிமன்றம் வரை வானத்திற்கும் பூமிக்கும் குதித்த குதி….

அந்த அறிக்கை முறைப்படி வெளியிடப்பட்டதா ? திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டது ஏன் ? அதில் சொல்லப்பட்டிருக்கிறக் கணக்கிற்கு அடிப்படை என்ன ? சொல்லப்பட்ட அளவிற்கு விலை வைத்தால் மக்கள் தலையில் சுமை ஏறாதா ?

இது போன்ற கேள்விகளை சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. ஊடகங்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் மட்டுமே குறி. அதிகாரிகளுக்கும், நீதியாளர்களுக்கும் ஊடகங்களை கண்டு பயம். குற்றம் சுமத்திய சில உத்தமர்களுக்கு ஊடக வெளிச்ச வெறி.

அன்று பதில் சொன்ன எங்களை போன்றவர்களை கண்டால் ஏளனம், அம்மணமாக அலைகிறவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல.

அம்மணக் கும்பல் ஆவலாக எதிபார்த்த 2G ஏலம் வந்தது. பல பகுதிகளுக்கு ஏலம் எடுக்கவே யாரும் துணியவில்லை.

ஏற்கனவே இவர்கள் சொன்ன குற்றம், அண்ணன் ஆ.ராசா காலத்தில் வசூலான தொகை 10,400 கோடி. இழப்பு 1,76,000 கோடி என்றார்கள்.

இப்போது 9,400 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இது ஒரு முறை மட்டுமே வசூலாகிறத் தொகை.

கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி : அண்ணன் ராசா காலத்தில் வந்த தொகை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அரசுக்கு வந்து கொண்டே இருக்கும் வருவாய், வருமானப் பகிர்வு என்ற அடிப்படையில்.

தகத்தகாய சூரியன்
மக்களின் வரவேற்பில் ஆ.ராசா

இப்போது சொல்லுங்கள்… ஒரு முறை வருகிற வருமானம் 9400 கோடி லாபமா ? ஆண்டு தோறும் வரக்கூடிய 10,400 கோடியா ? ( இணைப்பு அதிகரிக்க, அதிகரிக்க இந்தத் தொகையும் அதிகரிக்கும் )

ஏலத்திற்கு பிறகு நாடெங்கும் சி.ஏ.ஜி வினோத் ராய் இதற்கு பதிலளிக்க வேண்டுமென்ற குரல் வலுக்க ஆரம்பித்துவிட்ட்து. அம்மணக் குமபலை காணவில்லை.

ஓய்வு பெற்ற சி.ஏ.ஜி டி.என்.சதுர்வேதி சொல்கிறார், “ அந்த அறிக்கை, அந்த நேரத்தில் பரிசோதித்து அளித்த அறிக்கை. அதற்கு இந்த நேரத்தில் , சி.ஏ.ஜி பொறுப்பேற்க முடியாது “. அடப் பாவீகளா…

நீங்கள் குற்றம் சுமத்துவீர்கள், குற்றவாளி என்பீர்கள், வருடக் கணக்கில் சிறையில் அடைப்பீர்கள், ஆனால் ஆதாரம் கேட்டால் தடுமாறுவீர்கள். பொறுப்பேற்க அவசியம் இல்லை என்பீர்கள். இது என்ன மனுநீதியா ? உனக்கு ஓர் சட்டம், எங்களுக்கு ஓர் சட்டமா ?

# இது சதுர்வேதி குரல் அல்ல, சதுர்வேதத்தின் குரல், சதிவேதத்தின் குரல். உணர்வீர்களா PG- க்களே ?

நன்றி: முகநூல்