இன்று
இருபதாம் நூற்றாண்டின்
நரகாசுரனுக்கு
தமிழ் மண்ணின்
தேவிகள்
பெரியார்
எனப் பெயர் சூட்டிய
நாள்.

அறியாராய் இருந்த
தமிழர்களை,
ஆரியம்
சிறியாராய் அவமதித்த
திராவிடர்களை,

எதுவும் தெரியாராய் ஆக்கிட
சூழ்ச்சி புரிவோரின் ஆணவத்தைச்
சுட்டெரித்திடப்
பகுத்தறிவுப் பாடம் சொல்லிய
சூரியனுக்குப்
`பெரியார்’ எனப் பட்டம்
சூட்டியது சரிதானே என்று
உலகம் சொல்கிறதே
இன்று….!

     – சம்பூகன்