புரட்சியாளனாக வரும் தகுதி!?

அவனுக்கு அரசியல்வாதிகளின் மேல்
நம்பிக்கை இல்லை;
சேகுவேரா படம்போட்ட
டி-ஷர்ட் நான்கு வைத்திருக்கிறான்!
முகநூலில் இனத்துக்காக
மூர்க்கமாய் சண்டையிடுவான்.
திராவிடக் கட்சிகளால்
வந்ததென்ன, ஆனதென்ன என்பான்!
மாற்று அரசியல் புரட்சி
வந்தாலே எல்லாம் விளங்குமென்பான்;
பெரியார் என்ன கிழித்தார்

என விமர்சனம் செய்யும்
பெரிய அறிவாளி அவன்!
பெரிய புரட்சியாளனாக
வரும் எல்லா தகுதியும்
இருந்த அவனை
அசந்து போய் பார்த்திருந்தேன்;
ஒருநாள் தொலைக்காட்சியில்
‘திருச்சி சிவா’ வந்தார்,
“ஜேசுதாஸ் அரசியலுக்கு வந்துட்டாரா?” என்றான்;
எடுத்தேன் செருப்பை!

-டான் அசோக்