Month: August 2012

  • புரட்சியாளனாக வரும் தகுதி!?

    புரட்சியாளனாக வரும் தகுதி!?

    அவனுக்கு அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கை இல்லை; சேகுவேரா படம்போட்ட டி-ஷர்ட் நான்கு வைத்திருக்கிறான்! முகநூலில் இனத்துக்காக மூர்க்கமாய் சண்டையிடுவான். திராவிடக் கட்சிகளால் வந்ததென்ன, ஆனதென்ன என்பான்! மாற்று அரசியல் புரட்சி வந்தாலே எல்லாம் விளங்குமென்பான்; பெரியார் என்ன கிழித்தார் என விமர்சனம் செய்யும் பெரிய அறிவாளி அவன்! பெரிய புரட்சியாளனாக வரும் எல்லா தகுதியும் இருந்த அவனை அசந்து போய் பார்த்திருந்தேன்; ஒருநாள் தொலைக்காட்சியில் ‘திருச்சி சிவா’ வந்தார், “ஜேசுதாஸ் அரசியலுக்கு வந்துட்டாரா?” என்றான்; எடுத்தேன் செருப்பை!…