நாம் தமிழர் ஆவணம்

சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர்.

நாம் தமிழர் ஆவணம்
நாம் தமிழர் ஆவணம்

திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக்கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறுகிறனர். இந்தியாவில் எந்த இனத்திலும், இல்லாத அளவில் மொழியுணர்ச்சியும், தனி- ஈழம் – தமிழ்நாடு கோரிக்கைகளும் மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தமிழர் உணர்ச்சியை மழுங்கடித்து விட்டதாக கூறுவது உண்மையா? பெரியார் மொழியிலேயே அவர்களுக்கு விடை காண்போம்.

தமிழக அறிவையும், தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக்கொண்டு தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு பரப்புரையும் தன்மான பரப்புரையும் செய்தனர் என்கிறது ஆவணம்.

தமிழை பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று குடிஅரசு ஏட்டில் 4-9-1938 லேயே கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது.

”ஏ! சட்ட சபை தமிழா! நீ சர்வ முட்டாள் அல்ல! தாய்நாட்டுக்கு துரோகம் செய்யும் தருதலையும் அல்ல! தாய் மொழியை கட்டாயமாக்க கூடாது என்று கருதி திரியும் சண்டாளனுமல்ல!

நீ தமிழன். உன் தந்தை தமிழன். உன் தாய் தமிழ் மகள். உற்றார் தமிழர் உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீர தமிழர் குருதி.

கட்டாய இந்தியால் உன் தமிழ் நாலாவகையிலும் நசுக்கப்படுகிறது. மொழிப் பாடங்களை மட்டும் தமிழில் கற்றால் தமிழ் விருத்தியாகிவிடும் என்று கருதி மயங்காதே! உன் தாயை உன் தமிழை இம்சிக்காமல் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தீர்மானிப்பாயாக! இல்லையானால், தமிழை கட்டாயமாக்க வேண்டும் என்று முயலாமல் இருந்தாயானல், உன் நாட்டு மொழிக்கு துரோகியாவாய். உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய்.

நீ மானமுள்ள தமிழனானால், உன் பெற்றோரின் தமிழ் இரத்தம் உன் உடலில் நரம்பில் தோந்திருக்குமானால் இன்றே ஏன் இப்பொழுதே எங்கள் நாட்டில் எங்கள் தாய் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக.உங்கள் தமிழை கட்டாயாமாக்க முயசி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சி இல்லாத விலங்குகளா? தாய் மொழியில் அபிமானம் இல்லாத தசைபிண்டங்களா?.

தேசத்தின் பெயரையோ, சமுகத்தின் பெயரையோ சொல்லி சிறைச்சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் மொழி குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு. தன் மொழிக்காக சிறை புகுந்தான்! புகுகிறான்! புகுவான்! தடியடிப்பட்டான்! படுகிறான்! படுவான்! சகல துன்பங்களையும் அனுபவிப்பான் பேசும் தமிழை தாய் மொழியாக உடைய நீ, தாய் மொழியை கட்டாயமாக்க கூடாது என முயலும் துரோகியாக போகிறாயா? போவாயானால் ஏ! துரோகி உன் சட்ட சபை வாழ்விற்கு சாவு மணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்” என்று குறிப்பிடும் பெரியாரை தமிழை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று பகுத்தறிவு பரப்புரை செய்ததாக கூறுகின்றனர்.

தமிழரை தொடர்ந்துஅடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ் திராவிடநாடு முழக்கத்தை திராவிட இயக்கம் முன்னெடுத்ததாக நாம் தமிழர் கட்சி ஆவணம் கூறுகிறது.

எனக்கு ஏன் திராவிட நாடு வேண்டாம் என்று தந்தை பெரியார் அவர்கள் தனது 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் தனித்தமிநாடு கோரிக்கையை வலியுறுத்தி எழுதியுள்ள கட்டுரையை படியுங்கள்.

“1938-ம் ஆண்டு நான், ராஜாஜி ஆட்சிக்கொடுமையை கண்டு சென்னை ராஜதானி என்று பெயர் கொண்டிருந்த திராவிடநாடு தனி நாடாக ஆக வேண்டும் என்று கேட்டு திட்டம்போட்டு கிளர்ச்சி செய்து வந்தேன். அன்று பார்ப்பனர் தவிர்த்து யாரும் அதை எதிர்க்கவில்லை. அப்போது திராவிட நாடு என்பது ஆந்திரர், கன்னடம், மலையாளம் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு சிறு பாகமே தமிழ்நாட்டுடன் சேர்ந்து திராவிட நாடாக இருந்தது. தமிநாட்டு மக்கள் தொகை இரண்டு கோடியே எண்பத்தைந்து இலட்சம் மற்ற முன்றும் சேர்ந்து இரண்டு கோடியே எழுபத்தைந்து இலட்சம் தான். ஆகவே தமிழ்நாட்டு மக்கள் தொகை மேற்கண்ட முன்று நாடுகளை விட அதிகமாக இருந்தது. அரசியல் சமுதாய பொருளாதார நிலையில் இந்த நாடுகள் தமிநாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பதோடு நம் கை வலுத்தாகவும் இருந்தது.

ஆனால் இன்று தமிழ்நாடு மக்கள்தொகை முன்று கோடிக்கு கீழ்ப்பட்டதாகவும் அவை முன்றும் சேர்ந்து சற்றேரக்குறைய எட்டுக்கோடி மக்களாகவும் இருக்கிறார்கள். நாம் அதில் பகுதிக்கு கூட அருகதையற்றவர்களாக இருக்கிறோம். உலகில் பிரிவினைக்காரன் எவனும் பிரிந்த பின் விருப்பப்படி ஆட்சி அமைக்க, பதவி பெற வசதியாக யாருக்கும் மைனாரிட்டியாக இல்லாமல் சுய பலத்தோடு இருக்க என்னுவானா. மைனாரிட்டியாக இருக்க என்னுவானா? எனவே தான் திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லுகிறோம்.

சட்ட சபையில் நாம் 206 பேர் அவர்கள் 429 பேர் கூடுதலாக 635 பேர் இருக்கிறார்கள். பார்லிமென்ட்டில் நாம் 41 பேர் அவர்கள் 46 பேர் அதிகப்படியாக 87 பேர் இருக்கிறார்கள். திராவிட நாடு பிரிந்தால் நமது குறைகளை பங்குகளை யாரிடம் கேட்பது? எதற்கு பிரிவினை கேட்கிறோம்? இன்று நாம் மைனாரிட்டியாக இருந்து மற்றவர்கள் மெஜாரட்டி ஆட்சிப்படி நடக்க வேண்டி இருக்கிறது. பிரிந்தால் நமக்கு நாமே எஜமான். வேறு யாரும் கூடாது. நாம் யாருக்கும் அடிமையல்ல. என்கிற நிலை பெறவே பிரிவினை கேட்கிறோம். பிரிவினையால் பலன் அனுபவிக்க வேண்டுமானால் திராவிட நாடு கேட்பது புத்திசாலித்தனமா? தமிழ்நாடு கேட்பது புத்திசாலித்தனமா? என்பதை பற்றி இப்போது யோசித்துப்பாருங்கள்.”என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

இந்த வகையில் பெரியாரைப்பற்றி விமர்சிக்க இந்த காளான்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நாம் தமிழர் கட்சி தனது கொள்கை ஆவணத்தில் கலைச்சொல் விளக்கம் என்ற பெயரில் பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன்”. என்றும் ஆரியர் என்றால் ”சீரியன், உயர்ந்தவன்” என்றும் பிராமனன் என்றால் ”பேரமணன்” என்றும் கூறி பார்ப்பனர்களை மகிழ்விக்க துடிக்கிறது. ஆரியர் வருகை – மனுநெறியர் போன்ற மரியாதைக்குரிய சொல்லாடல்களையே பார்ப்பனர்களை குறிக்கும் இடத்திலெலாம் கையாண்டு இருக்கும் இந்த கூட்டம் பார்ப்பனர்களின் கைக்கூலிகளே என்பது தமிழர்களுக்கு விளங்காமல் போகாது.

நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் தங்கள் வழிகாட்டியாகவும், தமிழ்அறிஞர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அறிஞர்கள் பெரியாரைப்பற்றி கூறிய கருத்துக்கள் இதோ!

மறைமலைஅடிகள்: சாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக்கொகையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனை பகைத்தும் எனக்கு தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.
பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொகையையே மேலுந்தட்பமாக எடுத்துவிளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைப்பாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர்.

தேவநேயப்பாவாணர்: எல்லா துறைகளிலும், பிராமணீயத்தை வெளிப்படையாகவும் உண்மையாகவும் எதிர்த்து தமிழரை தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல் ஏனைய எவரும் செயற்கறிய செயலாதலின் பெரியார் உண்மையில் பெரியாரே.

சோமசுந்தர பாரதியார்: பெரியார் ராமசாமி அவர்கள் திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்கு சிறப்பாயும் உரிமையும், பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர். தற்கால தமிழகத்தில் தலைநின்று ஒல்லும்வகையில், ஓயாது உழைத்து, தமிழர் வாழ்வுயர் வளம் சிறக்க, உரிமைப்போர்த் தலையணியில், பொருது வரும் ஒப்புயர்வற்ற தலைவர். தம் வாழ்வனைத்தும் தமிழர் உரிமை பேனும் அறப்போருக்கு உதவி, நல்லோர் மதிக்கும் அல்லோர் அழுக்காறும் நாளும் பெருக்கும் இயபுடையவர்.

கா.அப்பாதுரையார் : தமிழர் உண்மையிலேயே தமிழராய் தனித்தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமைக்கொள்ள துணிவர்! தன்னாட்சி புரிவர்! அறிவாட்சியில் அன்புக்கலையாட்சியில் முனைவர்! என்பதகு பெரியார் வாக்கையின் வெற்றி ஓர் அறிய வழிக்காட்டியும் நற்குறியுமாகும்.

கி.ஆ.பெ.விசுவநாதம்: இந்நாட்டில் தோன்றி மறைந்தும் தோன்றி இருப்பதும், இனி தோறுவதுமாகிய எத்தகைய இயக்கமும் செய்திராத செய்யமுடியாத சீர்திருத்தச்செயல்களை இந்நாட்டில் சுயமரியாதை இயக்கம் செய்து காட்டிவிட்டது. எவராலும் நினைக்கவே முடியாத இவ்வியக்கத்தை தோற்றுவித்து நடத்தி வெற்றி அடைந்த பெரியார் அவர்கட்கு நாடும் இம்மாகானமும், இத்தேசமும் மட்டுமல்ல உலகமே ஒன்று சேர்ந்து நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது.

இலக்குவனார்: பெரியார் தலைமையில் நமது நாடு திராவிட நல்திருநாடு விடுதலை பெற்று உலக அரங்கில் உயர் பெருமை அடைவது உறுதி.

புலவர் குழந்தை: பெரியார் பிறவாதிருப்பரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ்நாகரிகம் எனும் உணர்ச்சியெலாம் தமிழ்மக்களுக்கு தோன்றியிரா. தமிழ் வாழ்க என முழக்கம் இடும் நெஞ்சத்துணிவுட ஒரு காலும் உண்டாகியிருக்காது. பெரியார் பிறந்ததால் தமிழருக்கு உண்டான நன்மைகள் அளவிறந்தன. அவற்றையெலாம் கூறப்புகின் அது தனி நூலாகிவிடும். 1920 தமிநாடு இருந்த நிலையும் இன்றுள்ள (1948) நிலையும் ஒத்திட்டு பார்த்தால் பெரியார் பிறந்ததினால் தமிழ்நாடு அடைந்த பயன் முழுதும் விளங்கும்.

வ்வளவு நன்மைகள் செய்த பெரியாருக்கு தமிழர்கள் செய்யும் கைமாறு என்ன? தமிழர் உரிமை காக்க புதிதாக புறப்பட்டிருக்கும் சீமான்களே! உங்கள் வழிகாட்டிகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்