Month: June 2012

  • இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

    இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

    இன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது.   இடஒதுக்கீடு என்றால் ஏதோ வறுமை ஒழிப்பு  திட்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இன்றைய நம் இளைய தலைமுறையினர். அது, காலம்…

  • பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா?

    பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா?

    பொறுமைக்கும் எல்லை உண்டு என்று பொய் வழக்கு போடும் தமிழக அரசைப் பார்த்து கலைஞர் ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு ஒரு பார்ப்பன யோக்கிய சிகாமணி சொல்லுகிறார் பாருங்களேன். “இந்த ஓராண்டுக்கே இப்படி பொறுமை எல்லை கடக்கும் என்றால் – பலப்பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவது அவர்கள் பொறுமையை சோதிக்கக் கூடும் – என்று இப்போது கூட கருத முடியவில்லை என்பதுதான் வேதனை. தலைவலி – தனக்கு வந்தால் மட்டுமே தெரிகிறது..” என்று பிதற்றி இருக்கிறார்…

  • திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

    திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

    – சொ.சங்கரபாண்டி திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார். வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது.…

  • சாய்வு இருக்கையில் சாயாத சிங்கம்

    சாய்வு இருக்கையில் சாயாத சிங்கம்

    சாதாரணமாக நான் ஈஸிசேரில் உட்காருவது கிடையாது.எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கின்றதென்றாலும் ஈஸிசேர் (சாய்வு நாற்காலி) கிடையாது. இருந்தாலும் அதை உபயோகிப்பதில்லை. ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்போது சாய்ந்துகொண்டு உட்காருவதில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவை. நான் அப்படி சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவனல்ல. மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச்சீட்டில் கூட இல்லாமல் பாதிஅளவு மட்டும் சீட்டில் முன்தள்ளி உட்காருவேன். மேலும் என் வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும் பிரயாணகாலத்தில் அநேகமாய் மோட்டார்…

  • அடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா?

    அடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா?

    குன்றக்குடி அடிகளார் மடத்தை சார்ந்த ஒருவர் தந்தை பெரியாரின் நெற்றியில் அவர்களது வழக்கப்படி திருநீறு பூசினார். அந்த சாம்பலை தந்தை பெரியார் துடைத்துகொண்டார் என்பது மட்டுமே இதுவரை செய்தி. தற்போது திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூலில் இருந்து பெறப்பட்டதாக வினவு தளத்தில் ஓரு புதிய கதையை கட்டுரையாக பதிந்துள்ளார். அதை ஆதாரம் என்று சொல்லி சிம்ம வாகனி என்ற ஒருவர் முகநூலில் வாதாடிக்கொண்டிருக்கிறார். சரி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ளதாக வந்துள்ள செய்தி என்ன? திருச்சியில் தந்தை…

  • சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்

    சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர். திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக்கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறுகிறனர். இந்தியாவில்…